இணையத்தில் தமிழகப் பாடநூல்கள்!

Posted by mugunth on 19 Apr 2008 | Tagged as: பொது, அரசியல்

தமிழுலகம் குழுவிலிருந்து கிடைத்தத் தகவல்:

தமிழக அரசின் பாடநூட்கள் அனைத்தும் வலையேற்றப்பட்டுள்ளன.

பார்க்க:  http://www.textbooksonline.tn.nic.in/

வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற முயற்சி நடந்ததா என்று தெரியவில்லை.

நல்ல முயற்சி, தமிழக அரசுக்குப் பாராட்டுக்கள்.

நாமக்கல்லில் குற்றவாளிக்கு 110 மணி நேரத்தில் தீர்ப்பு !

Posted by mugunth on 29 Feb 2008 | Tagged as: பொது

இந்தியாவிலுள்ள நீதிமன்றங்கள் என்றாலே தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை மாறி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு நீதிமன்றம் குற்றம் நடந்த 110 மணி நேரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதைப்பற்றிய செய்தியைப் பார்க்க சொடுக்குங்கள் இங்கே.

மலேசியா இன்று - புதிய மலேசிய செய்தித்தளம்

Posted by mugunth on 25 Feb 2008 | Tagged as: பொது, கணிணி

மலேசியாவில் பிரபலமான செய்தித் தளமான மலேசியகீனி தற்போது தமிழிலும் தன் சேவையை தொடங்கியுள்ளது. தமிழில் தளத்தை இலவசமாக கொடுக்கிறார்கள்(ஆங்கிலத் தளத்திலுள்ள செய்திகளை படிக்க கட்டணம் உண்டு).

இதன் வலை முகவரி: http://www.malaysiaindru.com

மலேசிய தமிழர் போராட்டம்.

Posted by mugunth on 25 Nov 2007 | Tagged as: அரசியல்

இன்று மலேசியாவிலுள்ள தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதியான வழியில் பேரணி நடத்தியுள்ளனர். அதனை மலேசிய போலீஸ் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தி களைத்துள்ளனர்.

பார்க்க கீழேயுள்ள விடியோ படங்களை…

http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8

http://www.youtube.com/watch?v=m96FCTKHNA8

மலேசியாவில் தமிழருக்கு எதிராக நடக்கும் உரிமை மீறலுக்கு எதிராக இந்தியா மற்றும் மற்ற ஜனநாயக அரசுகள் குரல் கொடுக்கவேண்டும்.

வன்முறையை விதைக்கும் தொலைக்காட்சி தொடர்கள்

Posted by mugunth on 06 Nov 2007 | Tagged as: பொது

நான் தொலைக்காட்சி தொடர்களை பெரும்பாலும் பார்ப்பது இல்லை. எப்பவாவது பொழுது போகவில்லை என்றால் தொலைக்காட்சி தொடர்களை பார்வை இடுவது உண்டு.

அண்மையில் அப்படி தொலைக்காட்சி சானல்களை மேய்ந்து கொண்டிருக்கு ம் போது அருவருக்கத்தக்க வகையில் ஒரு காட்சியை கண்டேன்.

அது எந்தத் தொடர் என்று தெரியவில்லை, நாலு ரவுடிகள் டெல்லிகணேசை போட்டு அடித்துவிட்டு, அவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயற்சிப்பார்கள். பிறகு எப்படியோ மற்றவர் தலையீட்டால், டெல்லிகணைஷ் தப்பி ரத்தம் சொட்டும் தலையுடன் அருகிலுள்ள கோயிலுக்குள் சென்றுவிடுவார். அதன்பிறகும் அதே ரத்தகறையுடன் அவரை காட்டிக்கொண்டிருப்பார்கள். பார்க்க கீழேயுள்ள படங்களை…

இது போன்ற காட்சிகளைதான் தமிழகத்திலுள்ள பெரும்பாலான வீட்டில், சிறுபிள்ளைகள், வீட்டிலிருக்கும் பெண்கள் உட்பட மொத்த குடும்பமும் தினமும் இரவு நேரத்தில் பார்த்துவிட்டு தூங்கப் போகிறார்கள். இப்படிப்பட்ட சூழல் தொடர்ந்தால் தமிழ் சமூதாயம் எப்படிபட்டதாக மாறும் ?

தமிழ் சமுதாயம் அமைதியாகவும் அறிவுடனும் இருக்கவேண்டுமேன்றால் இந்த மாதிரியான தொலைக்காட்சித்தொடர்கள் தடை செய்யப்படவேண்டும்.

சிட்டுக்குருவிகள் எங்கே ?

Posted by mugunth on 07 Jul 2007 | Tagged as: சூழல்

சிட்டுக்குருவிகளை நம் வீடுகளில் அண்மை காலங்களில் பார்க்க முடியவில்லை என்று அப்பாவி இந்தியன் என்பவர் எழுதிய இந்த பதிவில் படித்தேன். http://kaartz.blogspot.com/2007/07/blog-post_6979.html

யோசித்துப்பார்க்கும்போது எனக்கும் சிட்டுக்குருவிகளை கடைசியாக பார்த்து வெகு நாட்களாகிவிட்டது புரிந்தது. ஒருவேளை இங்கு பெங்களுரில் எப்போதும் சிட்டுக்குருவிகள் இருக்காதா இல்லை இது சுற்றுசூழல் மாற்றத்தின் விளைவா என்று புரியவில்லை.

அடுத்தமுறை சொந்த ஊருக்குச் செல்லும்போது சிட்டுக்குருவியைத் தேடவேண்டும் என்று இருக்கிறேன்.

யாதார்த்தமான ஒரு விசயத்தை பற்றிய சிந்தனையை தூண்டக்கூடிய பதிவை எழுதிய அப்பாவி இந்தியனுக்குப் பாராட்டுக்கள்.

தினகரன் பத்திரிக்கையின் ‘போட்டோ திருட்டு’ அம்பலம்.

Posted by mugunth on 21 Jun 2007 | Tagged as: பொது

இன்று மதியம் என் அலுவலக நண்பர் சுபாஷ், தன்னுடைய போட்டோ தினகரனில் வந்துள்ளது என்றார். வாழ்த்துக்கள், உங்க போட்டோ பத்திரிக்கைல வர அளவுக்கு என்ன செஞ்சீங்க என்றேன். என்னோட போட்டோ இல்லைங்க, நான் எடுத்த படத்தை என்ன கேட்காமலே தினகரன்ல சுட்டு போட்டிருக்காங்கன்னார்.

இந்த நண்பர் தான் எடுத்த பெங்கலூர் பி.எம்.டி.சி பேருந்து போட்டோவை(அந்த போட்டோவில் அவர் நண்பரும் இருக்கிறார்) ஃபிளிக்கரில் ஏற்றி வைத்திருந்தார். பார்க்க: http://flickr.com/photos/subwiz/294655262/


இதை தினகரன் பத்திரிக்கை ஆட்கள் எடுத்து அவர்கள் பத்திரிக்கையில் ஒரு செய்திக்காக போட்டிருக்கிறார்கள். பார்க்க: http://www.flickr.com/photos/subwiz/580464665/


இதைப்பற்றிய சுபாஷின்ஆங்கிலப் பதிவு: http://jroller.com/page/jcraze?entry=my_photograph_stolen

தினகரன் செய்திருப்பது அப்பட்டமான அறிவுத்திருட்டு.

தினகரன் பத்திரிக்கை செய்தி

புதிய பதிவு,புதிய சேவையில் (சோதனையில்…)

Posted by mugunth on 09 Jun 2007 | Tagged as: Uncategorized

தமிழ்ப்பதிவுகள் தளத்தில் இலவச வலைப்பதிவுகளை கொடுக்க முயற்சி எடுத்துவருகிறேன். அதாவது புளாக்ஸ்பாட் போல் ஒரு இலவச சேவை தமிழ் பதிவர்களுக்கு. இதற்கு வேர்ட்பிரஸ் மென்பொருளை நிறுவி சோதித்துவருகிறேன். ராஜா மற்றும் சிலர் இந்த புதிய சேவையை பயனப்படுத்த துவங்கி இருக்கிறார்கள்.

நானும் இந்த புதிய சேவைக்கு என்னுடையப்பதிவை மாற்றியுள்ளேன். இன்னும் என்னுடைய பழைய இடுகைகளை இங்கு இடம் மாற்றம் செய்யவில்லை. தற்போதைக்கு என் பழைய பதிவுகளை http://mugunth1.tamilblogs.com என்ற முகவரியில் படிக்கலாம். அவற்றை கூடிய விரைவில் இங்கு மாற்ற உள்ளேன்.

உங்களில் யாருக்காவது தமிழ்பதிவுகளில் ஒரு பதிவை தொடங்கவேண்டும் என்ற ஆவல் இருந்தால் - http://tamilblogs.com/wp-signup.php என்ற சுட்டியைத் தட்டிப்பார்க்கவும். இந்த சேவை இன்னும் சோதணையிலுள்ளது என்பதை கவனித்தில் எடுத்துக்கொள்ளவும் (ஆகையால் அவ்வப்போது சேவையில் தடங்கல் ஏற்படலாம்).

கோவை வலைப்பதிவர் சந்திப்பு.

Posted by mugunth on 21 May 2007 | Tagged as: தமிழ்ப்பதிவுகள்

கடந்த ஞாயிறு (20-மே-2004) அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
2 வாரங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்ததால் சிரமம் இல்லாமல் பெங்களூரிலிருந்து சென்று வரமுடிந்தது.
சக வலைப்பதிவர்கள் சிலர் விரிவாக கோவை சந்திப்பு பற்றி எழுதிவிட்டார்கள்.
பார்க்க: http://masivakumar.blogspot.com/2007/05/blog-post_21.html
http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.html
http://tvpravi.blogspot.com/2007/05/blog-post_9922.html
http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.html

இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிட்டதட்ட அங்கு வந்திருந்த அனைவரையுமே (மா.சிவக்குமாரைத் தவிர) தற்போதுதான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறேன். சிவக்குமாரை கிட்டதட்ட 5 வருடத்திற்கு முன்பு மலேசியாவில் பார்த்தேன். அப்போது இருந்த மாதிரியே தற்போதும் இருக்கிறார் )

வினையூக்கி, சென்சி, பாலபாரதி, மோகன்தாஸ், உண்மைத்தமிழன், வித்யா, செந்தழல் ரவி போன்ற வலைப்பதிவர்களை சந்தித்த மாத்திரத்தில் அவர்களின் சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொண்டது. நீண்ட நாள் நண்பர்கள் போல் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடிந்தது. ஓசை செல்லாவை சந்திக்க முடியவில்லை என்பது சற்று ஏமாற்றம். பாமரன் அய்யாவின் சமூக அக்கரையுடன் கூடிய கட்டுரைகளை முன்பே படித்திருக்கிறேன். பாமரனை சந்தித்தது எதிர்பாராத மகிழ்ச்சி.

ரமணி அய்யா அவர்களின் பின் நவிணத்துவம் பற்றிய கட்டுரை எனக்கு அவ்வளவாக
ஏற்புடையதாக இல்லை என்றாலும், சிறப்பாக இருந்தது, இலக்கியத்தில்
ஈடுபாடுள்ள நண்பர்களுக்கு அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

வலைப்பதிவர் சுப்பைய்யா அவர்கள் தனக்கு எப்படி வாத்தியார் என்ற பட்டம்
வலையுலகில் கிடைத்தது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
வலைப்பதிவர்கள் தியாகு, கோவை ரவி, தாமோதரன் சந்துரு, செகுவேரா, ஜெயகுமார்,
ராஜாவனஜ் போன்றோரை சந்திக்க முடிந்தது. இயற்கை விவசாயத்தில் ஆர்வலர் திரு
வின்செண்ட் என்ற உள்ளூர்காரரையும் சந்தித்து பேசமுடிந்தது சிறப்பான
அனுபவம்.

சிரில் அலெக்ஸ் அவர்களுடன் ஸ்கைப் வழியாக வீடியோ அரட்டை அடித்ததும் சிறந்த அனுபவம். அவர்கள் நடத்தும் ‘சற்றுமுன்’ சேவை குறித்து விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது.

அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு/பட்டறையில், தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களைப் பற்றி மேலும் சில அமர்வுகளை ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் விருப்பம்.

அங்கு நான் படைத்த தொழில்நுட்ப அமர்வின், காட்சிக் கோப்புகளை பி.டி.எப் வடிவத்தில் இங்கு வலை ஏற்றியுள்ளேன். தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தகைய ஒரு சந்திப்பை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய பாலபாரதி உண்மையில் ‘தல’ தான் :) . பாலபாரதிக்கு என்னுடைய நன்றிகள்.

வெகுசன ஊடகத்தில் தமிழ்ப் வலைப்பதிவுகள்.

Posted by mugunth on 24 Apr 2007 | Tagged as: தமிழ்ப்பதிவுகள்

தமிழ்வலைப்பதிவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. தற்போதைக்கு 1000 க்கும் மேலான (active)தமிழ்ப்பதிவுகள் இருக்கும் என்று கருதுகிறேன். தமிழ்ப்பதிவுகள் தளத்தில் திரட்டப்படுகிற சுமார் 650 பதிவுகள பட்டியல் இங்கே உள்ளது.

அண்மையில் நடைபெற்ற சென்னை தமிழ்வலைப்பதிவர் கூட்டத்தில் சுமார் 50 பேர் கலந்துகொண்டார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.

அதைவிட மகிழ்ச்சி அளிக்ககூடிய செய்தி, அந்த வலைப்பதிவர் கூட்டத்தை மக்கள்
தொலைக்காட்சியில் காட்டியதுதான். வெகுசன ஊடகத்தில் மாற்று ஊடகமாக
பரிணமித்து வரும் வலைப்பதிவுகளைப் பற்றிய செய்தியை அளத்தது மேலும் பலரை
தமிழ்வலைப்பதிவின் பக்கம் கொண்டுவரும் என்று நம்புகிறேன்.

தமிழ் வலைப்பதிவர் ஒரு சக்திமிக்க மற்றும் சமூக பார்வைகொண்ட ஊடகமாக
மாறவேண்டும் என்பது என் விருப்பம். அந்த வகையில் அண்மையில் நடந்த
சந்திப்பு கூட்டமும், அதை ஒட்டிய ஊடக செய்திகளும்  மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்த சந்திப்பு பற்றிய என் கண்ணில் பட்ட பதிவுகள் பட்டியல்:

http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_23.html


http://madavillagam.blogspot.com/2007/04/blog-post_24.html


http://abiappa.blogspot.com/2007/04/blog-post_22.html


http://snapjudge.blogspot.com/2007/04/chennai-blogger-meet-tamil-posts.html


http://idlyvadai.blogspot.com/2007/04/fir.html


http://chennapattinam.blogspot.com/2007/04/blog-post.html


http://sugunadiwakar.blogspot.com/2007/04/22042007.html


http://poonspakkangkal.blogspot.com/2007/04/22.html


http://balabharathi.blogspot.com/2007/04/blog-post_24.html


http://koluvithaluvi.blogspot.com/2007/04/blog-post_24.html


http://gilli.in/bloggers-meet-in-chennai-2/


http://imohandoss.blogspot.com/2007/04/blog-post_24.html


http://mugunth.blogspot.com/2007/04/tamil-blogging-community-gets-media.html

(இது என் ஆங்கிலப்பதிவு)

Next »